×

பாலியல் கொடுமை செய்து சிறுமி கொலை கணவனுக்கு 37 ஆண்டுகள், மனைவிக்கு 17 ஆண்டு சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (32). விவசாயி. மனைவி கிருத்திகா (22). குழந்தை இல்லை. இருவரும் கடந்த 2022, அக். 20ல் திருப்பூரில் உறவினர் வீட்டிற்கு சென்றனர். அங்கு உறவினர் வீட்டருகே வசித்த 4 வயது சிறுமி மற்றும் பெற்றோருடன் நெருக்கமாக பழகி, தங்களுக்கு குழந்தை இல்லாததால், உங்கள் மகளை சில நாட்கள் எங்கள் வீட்டில் வைத்திருக்கிறோம் என கூறி ஊருக்கு அழைத்து வந்தனர். இங்கு சிறுமி விழுந்து மயக்கமடைந்ததாக கூறி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு குழந்தை இறந்தது. விசாரணையில் சிறுமிக்கு, ராஜேஷ்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்ததும், அதற்கு கிருத்திகா உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருணாநிதி விசாரித்து, ராஜேஷ்குமாருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், கிருத்திகாவிற்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

The post பாலியல் கொடுமை செய்து சிறுமி கொலை கணவனுக்கு 37 ஆண்டுகள், மனைவிக்கு 17 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Rajesh Kumar ,Vadamadurai ,Krithika ,
× RELATED கோடை மழை எதிரொலி: அய்யலூர் சந்தையில் தக்காளி வரத்து குறைந்தது